Also Watch
Read this
By: Web Team

திமுக முன்னாள் எம்பி ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கை நீண்ட காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பிய உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய நெல்லை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஞானதிரவியத்திற்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரிய மனு மீதான விசாரணையின்போது, நெல்லை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு, இவ்வளவு நீண்ட இடைவெளிக்கு வழக்கை ஒத்திவைத்தது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி வேல்முருகன், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை விரைந்து விசாரிக்கதான் சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கருத்து தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved