Also Watch
Read this
By: Manigandan Raja

திரளான பக்தர்கள் கூட்டம் :
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலில் மாசித் திருவிழா பிப்ரவரி மாதம் 21-ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இன்று ஒன்பதாவது திருவிழா மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை ஆக வந்து வேல் குத்தியும், காவடி எடுத்தும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
கோவில் கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் நீராடி சுமார் 5 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான
தேரோட்டம் நாளை காலை நடைபெறுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved