Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து 278 கிலோ எடையிலான காலாவதியான பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் கிடங்குகளில் காலாவதியான பொருட்களை வைத்திருப்பதாக வந்த தகவலில் பேரில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மாவட்டத்தில் உள்ள 37 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஃபிளிப்கார்ட் நிறுவன கிடங்கில் இருந்து பெட்டி பெட்டியாக இருந்த காலாவதியான பேரிச்சம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved