Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு சிவலூரைச் சேர்ந்த பக்தர்கள் காளி, கருங்காளி, செங்காளி, சுடலை, அம்மன் என பல்வேறு வேடங்களை அணிந்து வீதி வீதியாக சென்று காணிக்கை பெற்றனர்.
தசரா திருவிழா கடந்த 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகின்ற அக்டோபர் 3 நடைபெற உள்ளது. தசரா திருவிழாவையொட்டி நடைபெற்ற நடன நிகழ்ச்சியை பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.