Also Watch
Read this
By: Web Team

வார விடுமுறையை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். மார்கழி குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலை முதலே கோயிலில் குவிந்த பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுரத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் காத்திருப்பு அறை இருந்தும் பூட்டப்பட்டிருந்ததால் கடும் குளிரில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் காத்திருப்பு அறையில் பக்தர்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved