Also Watch
Read this
By: Web Team

புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்து, நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். திருத்தணியில், புகழ்பெற்ற முருகன் கோயிலில், புரட்டாசி மாத கிருத்திகையை முன்னிட்டு, இன்று அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜை நடைபெற்று தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கிருத்திகை மற்றும் வெள்ளிக்கிழமை என்பதால், தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், திருத்தணிக்கு வருகை தந்து, படி மற்றும் மலைப்பாதை வழியாக மலைக் கோயிலுக்கு வந்தடைந்தனர்.சுமார் 2 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved