news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அண்ணாமலையாரை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
tv

Also Watch

tv

Read this

அண்ணாமலையாரை தரிசிக்க 6 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்

திருவண்ணாமலை

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
thiruvannamalai

ஐப்பசி மாத பௌர்ணமியில், கிரிவலம் முடித்து விட்டு, அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க, ஆறு மணி நேரம் காத்திருந்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோயிலை ஒட்டிய 14 கிமீ மலையைச் சுற்றி, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் என்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், ஐப்பசி மாத பௌர்ணமியில் இரவு முழுவதும் கிரிவலம் வந்தனர்.
கிரிவலத்தை முடித்த பக்தர்கள், அன்னாபிஷேகம் என்பதால், அருணாச்சலேஸ்வரர் கோயிலில், சாமி தரிசனம் செய்ய இரவு முதலே நீண்ட வரிசையில் சுமார் ஆறு மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் வைக்கப்பட்டிருந்தது.
போலீசார் அதிகாலை முதலே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, கூட்டத்தை கட்டுப்படுத்தி, பெரிய அளவில் தள்ளுமுள்ளு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக, பக்தர்களை பிரித்து அனுப்பி வைத்தனர். இதையும் பாருங்கள் - திருவண்ணாமலையில் குவிந்த கூட்டம், கிரிவலம் முடிந்து திரும்பிய பக்தர்கள் |ThiruvannamalaiGirivalam

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

போராட்டம் வாபஸ் என சி.ஜே.பி. அறிவிப்பு

9
13 hrs 14 mins agoshare
news imagebutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau