Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 01:44 PM
By: Manigandan Raja

மாற்றுத் திறனாளிகள் கண்டனம் :
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த தச்சூரில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது
அப்போது மாற்றுத்திறனாளிகளை கொச்சைப்படுத்தும் விதமாக திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசினார் அதனை கண்டிக்கும் வகையில் திருப்பத்தூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் திடீரென
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ள பிரதான சாலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனை அறிந்த திருப்பத்தூர் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாற்றுத்திறனாளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சாலை மறியலில் கலைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved