Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனை வளாகத்தில் அதிக அளவில் நாய்கள் சுற்றித் திரிவதால் நோயாளிகளும், துணையாக வருபவர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.மருத்துவமனை வளாகம் மட்டுமல்லாமல் மருத்துவமனைக்குள்ளும் வரும் நாய்கள் வார்டுகளுக்குள்ளும் சுற்றுவதால் நோயாளிகளும் அச்சம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாய்களை பிடித்து அப்புறப்படுத்தி, மருத்துவமனையில் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.