Also Watch
Read this
By: Pari karthick

இராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ரயில் தண்டவாள விரிவாக்க பணிகளுக்காக இரட்டைக் கண் சுரங்கப்பாதை ஒரு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. டிசம்பர் 15ஆம் தேதி துவங்கி 24ஆம் தேதி வரை இந்த சுரங்கப்பாதை மூடப்படுவதால், சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்களும், அடிப்படை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக இந்த சுரங்கப்பாதையை பயன்படுத்தி வந்தவர்களும் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved