Also Watch
Read this
By: Web Team

தங்கள் கவனத்துக்கு வரும் அனைத்தையும் விசாரிக்க அமலாக்கத்துறை சூப்பர் போலீஸ் அல்ல என அதிருப்தி தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், தனியார் மின் உற்பத்தி நிறுவனத்தின் 901 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடு முடக்கத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
2006 ஆம் ஆண்டு நிலக்கரி ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த கூடுதல் அறிக்கையின் அடிப்படையில், ஆர்.கே. எம். மின் உற்பத்தி நிறுவனத்துக்கு சொந்தமான 901 கோடி ரூபாய் நிரந்தர வைப்பீடுகளை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
இதனை எதிர்த்து அந்நிறுவனம் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் வி.லட்சுமிநாராயணன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றச்செயல்கள் குறித்து தனிநபர்கள், காவல்துறை அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு வரலாம் என்றும்,இந்த வழக்கில் அவ்வாறு எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved