Also Watch
Read this
By: Web Team

சென்னை கொடுங்கையூர் எழில் நகர் பகுதியில் உள்ள குப்பை கிடங்கின் வழியாக செல்லும் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் ஆபத்தான நிலையில் அறுந்து விழும் நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மின்சார கம்பம் சாய்ந்து கேபிள் இணைப்புகளில் தொங்கிக் கொண்டிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அங்கு எளிதில் பற்றக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்துள்ளதால், மிகப்பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாக தெரிவித்த பொதுமக்கள் அதனை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved