Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டத்தில் நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், காற்றாலை மின் உற்பத்தி தினந்தோறும் 8 மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்படுகிறது. ஆண்டிப்பட்டி மற்றும் காமாட்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட காற்றாலைகள் இயங்கி வருகிறது.
நடப்பு ஆண்டில் தென்மேற்கு பருவமழை முன்னதாகவே துவங்கி, பலத்த காற்று வீசுவதால், அனைத்து காற்றாலைகளிலும் மின்சார உற்பத்தி உயர்ந்துள்ளது. இந்நிலையில், காற்றாலை மின்சார உற்பத்தியை முழுமையாக பயன்படுத்த வேண்டும் என காற்றாலை உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved