Also Watch
Read this
By: Web Team

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி சாலையில், சுற்றுலா பயணிகளின் வாகனத்தை காட்டு யானைக் கூட்டம் உடைத்து சேதப்படுத்தியது. அங்கமாலியில் இருந்து வால்பாறைக்கு 2 கார்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள், வாட்ச் மரம் என்ற இடத்தில் சென்ற போது ஒரு கார் பழுதாகி நின்றது.
அதை சரி செய்வதற்காக மற்றொரு காரில் ஏறி சாலக்குடிக்கு சென்று மெக்கானிக்கை அழைத்து வந்த போது, 5 யானைகள் கொண்ட கூட்டம், காரை தலைகீழாக புரட்டி, உடைத்து சேதப்படுத்தியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணிகள், வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் விரைந்து சென்று யானைகளை விரட்டி காரை மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved