Also Watch
Read this
By: Web Team
டாஸ்மாக் நிர்வாகத்தை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் கடை சாவியுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் பணிச்சுமை மற்றும் காலி மதுபாட்டில் திரும்ப பெறும் திட்டத்தை கண்டித்து டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பாக நடைபெறும் இந்த போராட்டத்தில் டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் என 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். போராட்டம் காரணமாக, இன்று ஒரு நாள் மட்டும் அரசுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வருவாய் இழப்பீடு ஏற்படும் என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved