Also Watch
Read this
By: Web Team

கன்னியாகுமரி மாவட்டம் களியல் அருகே மூடப்பட்ட கல் குவாரியை சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தியதாக அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அதில் தொடர்புடையதாக போலீசார் இருவர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டனர். கட்டச்சல் பகுதியில் விதிமுறைகளை மீறியதாக கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்ட கல்குவாரியில் பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாக புகார் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து மாவட்ட எஸ்பி ஸ்டாலின் அங்கு ஆய்வு செய்ய சென்றபோது, கடையாலுமூடு காவல் நிலைய போலீசார் இருவர் அங்கு இருந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved