Also Watch
Read this
By: Web Team

ஈரோட்டில் உள்ள வஉசி பூங்கா சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தள்ளுவண்டிகள் சேதம் அடைந்தன.
கருங்கற்களால் கட்டப்பட்ட 10 அடி உயர முள்ள சுற்றுச் சுவரில் ஆங்காங்கே விரிசல்கள் உள்ள நிலையில், நள்ளிரவில் சுவர் இடிந்து விழுந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நீர்நிலை தொட்டிகள் நிரம்பி வழிவதால், சுவர்கள் வலுவிழந்துள்ள நிலையில், புதிதாக சுவர் அமைக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved