Also Watch
Read this
By: Web Team

சேலம் மாவட்டம் ஏற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில், காலை முதல் கருமேகம் சூழ்ந்து கனமழை கொட்டி தீர்த்தது. ஏற்காட்டில் கனமழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் ரம்மியமான அழகை கண்டு ரசித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved