Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பருவமழை பெய்தும் கடந்த மூன்று ஆண்டுகளாக ஆறுகள் வறண்டு காணப்படுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் இருந்து உருவாகி தமிழகத்திற்கு வரும் குப்தா ஆறு, திம்மம்மா ஆறு, மார்கண்டேயன் ஆறு ஆகிய மூன்று ஆறுகளும் வேப்பனபள்ளியை அடுத்த நெடுஞ்சாலை கிராமத்தில் கலந்து தென்பென்ணை ஆற்றில் கலக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆறுகளில் இருந்த தடுப்பணைகள் சேதமடைந்ததாகவும், இதனால் ஆற்றில் நீர் தேங்காமல் வறண்டு காணப்படுவதாகவும் விசாயிகள் தெரிவித்தனர். மேலும் தடுப்பணைகளை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved