Also Watch
Read this
By: Web Team

நாகை அருகே சுந்தரபாண்டியம் பகுதியில் காவிரி நீர் முழுமையாக வந்து சேராததால் வயல்களில் நெல்மணிகள் முளைக்காமல் வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
திருக்குவளை அருகே சித்தாறு பாசனம் மூலம் பாசன வசதி பெறும் சுந்தரபாண்டியம் வாய்க்காலுக்கு பாய்ந்த தண்ணீர் வயலுக்கு முழுமையாக வராததால் சுமார் 200 ஏக்கரில் நெல் மணிகள் முளைக்காமல் வீணாகி வருவதாக கூறுகின்றனர்.
எனவே வெள்ளையாற்றிலிருந்து, முட்டான்தோப்பு வழியாக சுந்தரபாண்டியம் பகுதிக்கு தனி பாசன வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved