Also Watch
Read this
Posted on: Jun 30, 2025 03:50 AM
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சென்ற போது, கால் தவறி 90 அடி ஆழ கிணற்றுக்குள் விழுந்த முதியவரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
நீலமலைக்கோட்டையைச் சேர்ந்த லிங்கசாமி என்பவர், தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் இருக்கும் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்வதற்காக இறங்கியுள்ளார்.
எதிர்பாராத விதமாக கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து தண்ணீரில் தத்தளித்தார்.
அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் விரைந்து வந்த ஒட்டன்சத்திரம் தீயணைப்பு துறையினர், வலை மற்றும் கயிறு கட்டி லிங்கசாமியை உயிருடன் மீட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved