Also Watch
Read this
By: Web Team

நெல்லையில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் 5ஆவது நாளாக கடலுக்கு செல்லாததால் நாட்டு படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. புயல் உருவாக வாய்ப்புள்ளதால் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என்பதால் நெல்லை மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் உவரி, இடிந்தகரை, பெருமணல், கூட்டபுளி, கூடுதாழை, கூட்டப்பனை, பஞ்சல், தோமையார்புரம், கூத்தன்குழி, மிக்கேல் நகரில் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved