Also Watch
Read this
By: Web Team

திருப்பூர் மாவட்டம், உடுமலை அடுத்துள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியின் நீர்ப் பிடிப்பு பகுதிகளான குருமலை, குழிப்பட்டி, ஜல்லிமுத்தான் பாறை உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்தது. இதனால், பஞ்சலிங்க அருவியில் தற்போது தடுப்புகளை தாண்டி அதிகளவு நீர்வரத்து உள்ள காரணத்தால், சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, தற்போது கோயில் நிர்வாகம் தரப்பில், குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோயில் ஊழியர்கள் சுழற்சி முறையில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved