Also Watch
Read this
By: Pari karthick

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே வீரபாண்டிய பட்டணத்தில் மழை நின்று 10 நாட்களாகயும் தண்ணீர் வடியாமல் சுமார் 50 க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிப்பதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமம் அடைந்துள்ளனர். பாத்திமா நகர் பகுதியில் குடியிருப்புகளை சூழ்ந்து தேங்கிய மழைநீரில் உயிரினங்கள் இறந்து துர்நாற்றம் வீசுவதாகவும், குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved