Also Watch
Read this
By: Web Team

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில், இனிப்பகத்தில் கியூ.ஆர். கோடு அட்டை மீது ஸ்டிக்கரை ஒட்டி மோசடியில் ஈடுபட்ட இளைஞரின் சிசிடிவி காட்சி வெளியானது. கியூ.ஆர். கோடு மூலம் வாடிக்கையாளர்கள் செலுத்திய பணம் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகாததை கண்டறிந்த சுவீட் கடையின் உரிமையாளர், அங்கிருந்த கியூ.ஆர். கோடு அட்டையை எடுத்துப் பார்த்தபோது, அதன் மீது மற்றொரு கியூ.ஆர்.கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையின் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் கடையின் முன்னால் இருந்த கியூ.ஆர். கோடு அட்டை மீது ஸ்டிக்கரை ஒட்டிச் சென்றது தெரியவந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved