Also Watch
Read this
By: Web Team

ஓய்வு பெற்ற ராணுவ வீரரையும் அவரது மனைவியையும் டிஜிட்டல் அரெஸ்ட் செய்யப்போவதாக மிரட்டி 60 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பறித்த 6 பேர் கும்பலை மதுரை போலீசார் கேரளாவில் கைது செய்தனர். மும்பை காவல் நிலையத்திலிருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட மோசடி கும்பல், முன்னாள் ராணுவ வீரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி பல கோடி ரூபாய்க்கு பண பரிவர்த்தனை நடந்திருப்பதாக மிரட்டி பணம் பறித்துள்ளனர். இதுகுறித்த புகாரை விசாரித்த சைபர் கிரைம் போலீசார், செல்போன் எண், வங்கி கணக்குகளை வைத்து கூடலூரை சேர்ந்த சுதீஷ், முகமது ரியாஸ், பைசல்ஹெக், அப்துல்கபூர், முகமது சையத், முகமது சமீன் ஆகியோரை கைது செய்து பணம், 9 செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved