Also Watch
Read this
By: Web Team

சென்னையில், 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில், இன்று ஒரு சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய் சரிந்துள்ளது.
ஒரு சவரன் தங்கம் 88 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
ஆபரணத் தங்கத்தின் விலையில், ஒரு கிராமுக்கு 375 ரூபாய் குறைந்தது.
ஒரு கிராம் தங்கம் 11 ஆயிரத்து 75 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலையிலும் ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்தது.
ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஆபரணத் தங்கத்தின் விலை முன் எப்போதும் இல்லாத வகையில், உயர்ந்து கொண்டே சென்றது. ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை எட்டிவிடும் வாய்ப்பு உள்ளதாக வர்த்தகர்கள் கூறி வந்தனர். அதன் பின்னர் விலையில் ஏற்ற, இறக்கம் இருந்தது.
காலையில் விலை குறைவு:
இந்த நிலையில், இன்று காலையில், அக்டோபர் 28ஆம் தேதி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு ரூ.1200 குறைந்து விற்பனையானது. இதனால், வாடிக்கையாளர்கள் ஓரளவு நிம்மதி அடைந்திருந்த வேளையில், அவர்களை மேலும் மகிழ்விக்கும் விதமாக பிற்பகலில், ஒரு சவரனுக்கு ரூ.1800 குறைந்து விற்பனையானது.
இதன்படி ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.88,600 ஆக இருக்கிறது. ஒரு கிராமுக்கு ரூ.225 குறைந்து, ரூ.11,075 ஆக உள்ளது.
கடந்த 10 நாட்களில் மட்டும், ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு சுமாராக ரூ.9000 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை குறைந்தாலும், அதிகரிக்கவில்லை என்பதை அறிந்து, வாடிக்கையாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved