Also Watch
Read this
By: Manigandan Raja

நெல்லை மாவட்டம் கொக்கிரகுளம் பகுதியில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை தோண்டும் பணி நடைபெற்று வந்தது தற்போது பணிகள் முழுவதும் முடிவடைந்து முக்கிய சாலையான நெல்லை சந்திப்பில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலை முழுவதும் தார் சாலை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.
இந்த நிலையில் இன்று நெல்லை சந்திப்பில் இருந்து மேலப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கொக்கிரகுளம் கிருஷ்ணன் கோயில் அருகே வந்தபோது திடீரென தார் சாலையில் பள்ளம் ஏற்பட்டு பேருந்து பள்ளத்தில் இறங்கி கவிழும் நிலையில் இருந்தது இதனை அடுத்து பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக இறங்கினர் பேருந்து ஓட்டுநர் பேருந்து எடுக்க முற்பட்டபோது அது மேலும் பள்ளத்தில் சிக்கியது இதனை அடுத்து அரசு பேருந்து மனையிலிருந்து மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு பேருந்து மீட்டனர்.

இதனால்அந்த பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது திடீரென பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததால் அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் இன்றி தப்பினர் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved