Also Watch
Read this
By: Manigandan Raja

வார விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலா பயணிகள் கடும் பனிமூட்டத்தை ரசித்து சாரல் மழை நனைந்து உற்சாகம் சாலை தெரியாத அளவிற்கு கடும் பனிமூட்டம் நிலவுவதால் வாகன ஓட்டிகள் ஊர்ந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
வாகன ஒட்டிகள் முகப்பு விளக்கு ஏறிவிட்ட வண்ணம் செல்கின்றனர் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் நேற்று இரவு முதல் இடைவிடாத சாரல் மழை மற்றும் கடும்
பனிமூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் மக்கள் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை இரவை பகலாக்கும் கடும் பனிமூட்டத்தால் வந்திருந்த சுற்றுலா பயணிகள் உற்சாகம் மேலும் சாரல் மழை கடும் பனிமூட்டம்நிலவுதால் படகு சேவை நிறுத்தம்
இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.
மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் டீக்கடைகள் மற்றும் பஜ்ஜி கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் எரிச்சாலை .அண்ணா சாலை .கிளியூர் நீர்வீழ்ச்சி செல்லும் சாலை . ஏற்காடு மலைப்பாதைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து போலீசார் சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved