Also Watch
Read this
By: Web Team

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக சாலையில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அரை மணி நேரத்திற்கும் மேலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, எஸ்.என்.டி.சாலை, தெப்பக்குளம் சாலை மற்றும் ஈரோடு சாலையில் உள்ள தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது. இதில் ஊர்ந்து சென்ற வேன் மற்றும் இருசக்கர வாகனங்கள் பழுதாகி நின்றன.