Also Watch
Read this
By: Web Team

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, மரங்கள் முறிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தன. இதனால் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செட்டியப்பனூர், வளையாம்பட்டு, ஜாப்ராபாத் உள்ளிட்ட இடங்களில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. இந்த நிலையில், வடிகால்வாயில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக வெளியேறிய கழிவுநீர், மழைநீருடன் கலந்து சாலைகளில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.