Also Watch
Read this
By: Fyrose Banu

பொன்னேரி அடுத்த தச்சூர் கூட்டு சாலையில் நடைபெற்ற முதலமைச்சர் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பொது வழியில் நீதிபதிகள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளை ஒருமையிலும், இழிவாகவும் பேசியதாக கூறப்படுகிறது. 
பொதுக்கூட்டத்தில் சர்ச்சை பேச்சு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 73-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் திமுக சார்பில், சோழவரம் மேற்கு ஒன்றியம் பொறுப்பாளர் ஆனந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தச்சூர் கூட்டு சாலையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஏழை எளியவருக்களுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார்.
ஒருமையில் பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திமுக கழகப் பேச்சாளர் சிவாஜிகிருஷ்ணமூர்த்தி தெருமுனை கூட்டத்தில் திருநங்கைகளையும், மாற்றுத்திறனாளிகளையும், நீதிபதிகளையும் பொது வழியில் ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர் நலத்திட்ட உதவிகள் பெயர் அளவிற்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நல திட்ட உதவிகள் வாங்க குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved