Also Watch
Read this
By: Manigandan Raja

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள சிறுநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த பாப்பா(61) என்ற மூதாட்டி அதே கிராமத்தில் தனியாக இருக்கும் வீடு ஒன்றில் கணவர் இறந்த நிலையில் வசித்து வந்துள்ளார்
இந்த நிலையில் கடந்த எட்டாம் தேதி இரவு வீட்டை விட்டு வெளியே இயற்கை உபாதை கழிப்பதற்காக வெளியே வந்துள்ளார் அப்போது மூதாட்டியின் கழுத்தில் இருந்த ஐந்து பவுன் தங்கச் செயினை மருமணப ர்கள் பறித்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து மூதாட்டியின் மகன் வேலாயுதம் வேப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர் விசாரணையில் மூதாட்டியின் மூத்த மகனின் மகன் இளங்கதிர் அவரது கள்ளக்காதலி மற்றும் நண்பருடன் சேர்ந்து மூதாட்டியின் நகை பறித்து சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இதை எடுத்து இளங்கதிர் கௌதம் அனிதா உள்ளிட்ட மூன்று பேர்களைப் பிடித்து வேப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர் பணத்திற்காக சொந்த பாட்டியிடமே நகை பறிப்பில் ஈடுபட்ட பேரன் உள்ளிட்ட மூன்று கைது செய்யப்பட்ட சம்பவம் தற்போது பெரும் வரவேற்பு ஏற்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved