Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரோட்டில் சுகுணா என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வரும் கிருஷ்ணகுமாரிடம் 1லட்சத்து 60ஆயிரம் ரூபாய் வாங்கிய கடனுக்கு 3லட்சம் ரூபாய் பணம் தவணை முறையில் செலுத்திய நிலையில் மீண்டும் 3லட்சத்து 50ஆயிரம் பணம் செலுத்த கோரி கிட்னியை சுகுணாவை தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் பணம் திரும்ப தர முடியவில்லை என்றால் கிட்னியை விற்று கொடு என கேட்டதோடு அதனை விற்க
தானே ஏற்பாடு செய்வதாக மிரட்டி உள்ளார்.
மேலும் அநியாயமான முறையில் வட்டி கேட்ட கிருஷ்ணகுமார் மீது ஈரோடு தெற்கு காவல் நிலைய போலீசார் கந்து வட்டி கொடுமை, பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல், தகாத வார்த்தைகளால் பேசுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.