Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் இன்று மாலை சூறாவளி காற்றுடன் கன மழை பெய்தது. இதனால் பவானிசாகர் செல்லும் சாலையில் உள்ள மரங்கள் மற்றும் மின்கம்பங்கள்
சாலையில் கவிழ்ந்தது.
மேலும் அரசு மருத்துவமனையில் மழைநீர் குட்டை போல் தேங்கி நிற்பதால் நோயாளிகள் அவதி அடைந்தனர். நகராட்சி சார்பில் புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியில் கட்டப்பட்ட கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டிட தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிகளில் புகுந்த மழைநீருடன் சேர்ந்த கழிவுநீரால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
மேலும் பரவலாக பலத்த சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால் பல இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு பல இடங்களில் சுமார் 3 மணிக்கு மேலாக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாலும் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர். தகவல் அறிந்து வந்த நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் சீர்
செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved