Also Watch
Read this
By: Web Team

கோவையில் வளர்ப்பு நாயின் சத்தம் கேட்டு வெளியே சென்ற நபர் அங்கிருந்த ஒற்றைக் காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்து தலைதெறிக்க ஓடிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. துடியலூர் அடுத்த திப்பனூர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையைக் கண்டு அங்கிருந்த வளர்ப்பு நாய் குரைத்த நிலையில், சத்தம் கேட்டு வந்த நாயின் உரிமையாளர் முத்து வீட்டின் கேட்டை திறக்கச் சென்றார். அப்போது வேட்டையன் என பெயரிடப்பட்ட அந்த காட்டு யானையைக் கண்டு பதறியடித்து வீட்டிற்குள் சென்றார். இந்நிலையில் காட்டு யானையை பிடித்து வனப்பகுதிக்குள் விட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved