Also Watch
Read this
By: Fyrose Banu

காஞ்சிபுரத்தில் புதிய முறைக்கு மாறும் ஹோட்டல்கள் கட்டையை பயன்படுத்தி ப்ளோயர் அடுப்பு மூலம் உணவு தயாரித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் பிரபல சரவணா பாலா உணவகத்தில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டையொட்டி புதிய வரவாக வந்துள்ள கட்டையை பயன்படுத்தி ப்ளோயர் அடுப்பு மூலம் உணவக தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு
வளைகுடா நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக, இந்தியாவில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்றைய தினம் முதலில் சென்னை காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடானது நிலவி வருகிறது.

மூடும் நிலைக்கும் தள்ளப்பட்டுள்ள உணவகங்கள்
இதன் காரணமாக வணிக சிலிண்டர்கள் பயன்படுத்தகூடிய உணவகங்கள் மூடும் நிலைக்கு
தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்நிலையை சமாளிக்க காஞ்சிபுரம் நெல்லுகாரதெரு பகுதியில் செயல்பட்டு வரும் பிரபல(சரவணபாலா) உணவகத்தில் இருப்பு சிலிண்டர்கள் குறைந்ததன் காரணமாக புதிய வகையிலான கட்டைகளை பயன்படுத்தி ப்ளோயர் முறை மூலம் உணவு பொருட்கள் தயாரிக்கும் அடுப்பினை கொண்டு அடுப்பு தயாரிக்கப்பட்டு வருகிறது.

புதிய வகை ஃப்ளோயர் அடுப்பு
கேஸ் தட்டுப்பாட்டு நிலையை சமாளிக்கும் வகையில் புதிய வகையிலான இந்த ப்ளோயர் அடுப்பு உணவகங்களில் புதிய வரவேற்பை பெற்றுள்ளது.இது குறித்து உணவக மேலாளர் சண்முகத்தை கேட்ட போது சென்னையிலிருந்து வாங்கப்பட்ட இந்த புதிய வகையிலான விரைவு அடுப்பு 40,000 ரூபாய்க்கு விற்பனைக்கு சந்தைக்கு வந்துள்ளதாகவும் இது போன்று வீட்டு உபயோகம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டிற்கும் இதே வகையிலான அடுப்புகள் கிடைக்கபெறுவதாகவும் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved