Also Watch
Read this
By: Manigandan Raja

கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற நடிகர் விஜய் பிரச்சார பொதுக்கூட்டத்தின் போது ஏற்பட்ட கடும் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து சிபிஐ தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக கரூர் தான்தோன்றி மலையில் உள்ள சுற்றுலா மாளிகையில் செயல்பட்டு வரும் தற்காலிக சிபிஐ (CBI) அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடைபெற்று வந்தது.
இன்று விசாரணைக்காக பணியில் இருந்த இரண்டு காவலர்கள் மற்றும் இரண்டு பொதுமக்கள் என மொத்தம் நான்கு நபர்கள் விசாரணைக்கு வருகை தந்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved