Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் பெய்து வரும் தொடர் சாரல் மழை மற்றும் மின்தடை காரணமாக கோடநாடு காட்சிமுனை சூழல் சுற்றுலாத்தலம், புதன்கிழமை ஒருநாள் மட்டும் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
கோத்தகிரியில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருவதோடு, கடும் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மின்தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தண்ணீர் விநியோகம் செய்ய முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.