Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நள்ளிரவில் சூறையாடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை இரவு 12 மணி அளவில் ஆரம்ப சுகாதார நிலைய கண்ணாடிக் கதவுகளை உடைத்தவர்கள், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்களின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ள கொடைக்கானல் போலீசார் அங்கிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved