Also Watch
Read this
By: Web Team

மனமகிழ்மன்றங்களில் மது விற்பனை செய்வதற்கு விதிமுறைகள் அனுமதிக்கின்றதா என்பது குறித்து தமிழக பதிவுத்துறை ஐ.ஜி. பதில் அளிக்க உத்தரவிட்டு, உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரணையை ஒத்தி வைத்தது.
அறந்தாங்கியை சேர்ந்த மனோகரன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், மனமகிழ்மன்றம் என்ற பெயரில் மதுபானக் கடைகளை தொடங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதால் கடையை மூட உத்தரவிடக் கோரினர்.
அப்போது விதிகளுக்கு உள்பட்டு மனமகிழ்மன்றம் செயல்படுவதாக அரசு மற்றும் மனமகிழ் மன்றங்கள் சார்பில் விளக்கம் அளித்த போது, குறுக்கிட்ட நீதிபதிகள் மனமகிழ்மன்றங்கள் ஏழைகளுக்கு உதவுதற்கே, அதில் மதுபானம் விற்பனை செய்ய யார் அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved