மின்கம்பத்தை அகற்றாமல் அலட்சியம் : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அண்ணா நகர் வடக்கு பகுதியில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அதில் வேலன் நகர் அருகே உள்ள தெருவில் தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது இந்த சாலையின் நடுவே மின்சாரக்கம்பம் உள்ளது.இதனை அகற்றாமல் தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாதி வருகின்றனர். மேலும் சின்ன சேலம் மின்சார அலுவலகத்தில் இதுகுறித்து பேரூராட்சி நிர்வாகம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு மின்சார கம்பத்தை அப்புறப்படுத்திவிட்டு சாலை அமைக்கும் பணி தொடர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். Related Link “கனவு காண்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது…”