Also Watch
Read this
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டத்தின் பழங்குடியினரான தோடர் இன மக்கள், தங்கள் பாரம்பரிய முறைப்படி புத்தாண்டு விழாவை வெகு சிறப்பாக கொண்டாடினர். "மொர்பர்த்" என்று அழைக்கப்படும் புத்தாண்டு பண்டிகையை ஒட்டி விரதம் இருந்து வந்த தோடர் மக்கள், உதகை அருகே முத்தநாடுமந்தில் பகுதியில் உள்ள மூன்போ மற்றும் ஒர்யள்வோ கோவில்களுக்கு சென்று காணிக்கை மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தி சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பாரம்பரிய நடனமாடியும் மகிழ்ந்தனர். இளைஞர்கள் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில் சுமார் 70 கிலோ எடையிலான இளவட்ட கல்லை தூக்கி அசத்தினார்கள். அதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குடும்பத்துடன் கண்டு களித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved