Also Watch
Read this
By: Web Team

வேலூரில் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சி அதிகாரிகள் காலி செய்ய சொன்னதால் மனமுடைந்த 72 வயது முதியவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு கண்டனம் தெரிவித்து மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொணவட்டம் அடுத்த சதுப்பேரியை ஒட்டியுள்ள தேவிநகரில் சுமார் 40 வீடுகள் நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ளதாக நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதனையடுத்து, மணி என்பவர் தற்கொலை செய்த நிலையில், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகளிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.