Also Watch
Read this
By: Web Team

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோயில் கட்டுவதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லி கற்களை அப்புறப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து ஜேசிபி இயந்திரத்தில் இளைஞர் ஒருவர் ஏறி அமர்ந்த போராட்டத்தில் ஈடுபட்டார். ஊத்துப்பட்டியில் ஒரு சமுதாயத்துக்கு சொந்தமான மதுரை வீர கருப்பண்ண சாமி கோயில் புனரமைப்பதற்காக கோயிலுக்கு அருகில் ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இதனால், இடையூறு ஏற்படுவதாக கூறி, அங்குள்ள மாற்று சமூதாயத்தினர் ஜல்லி கற்களை ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அகற்றிய போது வாக்குவாதம் ஏற்பட்டது.