Also Watch
Read this
By: Manigandan Raja

குளிக்க ஒரு நாள் தடை விதிப்பு :
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் தண்ணீர் அருவிபோல் கொட்டுவதால் விடுமுறை நாட்களில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து மகிழ்ச்சியாக குளித்து விட்டு செல்வது வழக்கம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதகரித்து காணப்படுவதால் கொடிவேரி அணையில் குளித்து செல்ல நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து நீண்டநேரம் அருவியில் குளித்து செல்கின்றனர்.
இதனையடுத்து இன்றுகொடிவேரி அணையில் வினாடிக்கு 800கன அடி நீர் செல்வதால் தண்ணீரின் வேகம் அதிகரித்து காணப்படுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பரிசல் சவாரி செல்லவும் இன்று ஒருநாள் தடை விதிப்பதாக நீர்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.