Also Watch
Read this
By: Web Team

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கீழ்பவானி பாசன பகுதியில் நெல் அறுவடை பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை கட்டணமாக மணிக்கு ஆயிரத்து 800 முதல் 2 ஆயிரத்து 800 ரூபாய் வரை தனியார் நிறுவனங்கள் வசூலிப்பதால், வேளாண் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகை கட்டணத்தில் நெல் அறுவடை இயந்திரங்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கீழ்பவானி பாசன பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களை விரைந்து திறக்க வேண்டும் எனவும் அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved