Also Watch
Read this
By: Web Team

கிராம ஊராட்சியில் நிலத்தின் வரைபடம் வழங்குவதற்கும், வீட்டுமனைக்கு ஒப்புதல் அளிக்கவும் 12 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய ஊராட்சி மன்றத் தலைவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜனதாபுரத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சீனிவாசன், 7 ஏக்கர் நிலத்தில் வீட்டுமனை அமைக்க முடிவு செய்துள்ளார்.
எனவே, நிலத்தின் வரைபடம் மற்றும் டிடிசிபி ஒப்புதல் கோரி, மேல்சான்றோர்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவர் சிவக்குமாரை அணுகியுள்ளார்.
அப்போது, ஒப்பதல் அளிக்க சிவக்குமார், 12 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், முதல் தவணையாக 10 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார்.
மேலும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தபோது, லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும்களவுமாக கைது செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved