Also Watch
Read this
By: Web Team

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்காக கையகப்படுத்தப்பட்ட தனியார் தினசரி அங்காடிக்கு சீல் வைக்க எதிர்ப்பு தெரிவித்த வியாபாரிகள், காய்கறிகளை சாலையில் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பழைய பேருந்து நிலையம் அருகே இயங்கி வந்த காந்திஜி நூற்றாண்டு நினைவு நாளங்காடி நகராட்சி சார்பில் கையகப்படுத்தப்பட்டு, அதற்கு பதில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கடைகள் ஒதுக்கப்பட்டன.
புதிய கடையில் வாடகை மற்றும் வைப்புத் தொகை அதிகம் என பழைய அங்காடியிலேயே கடைகள் செயல்பட்டன. இந்நிலையில், அங்கு வந்த அதிகாரிகளிடம் வியாபாரிகள் நீண்ட நேரம் வாக்குவாதம் நடத்திய நிலையிலும் அங்காடிக்கு சீல் வைக்கப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved