Also Watch
Read this
By: Web Team

தேனி மாவட்டம் பதினெட்டாம் கால்வாயில் நான்கு ஆண்டுகளாக தண்ணீர் வராமல் சிதலமடைந்து காணப்படுவதால் விவசாயம் செய்யமுடியாமல் தவிப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து ஐந்து மாவட்டங்களுக்கு பாசன வசதிக்காக சுமார் ஆயிரத்து 850 கன அடி வரை தண்ணீர் திறந்துவிடப்பட உள்ள நிலையில்,
பதினெட்டாம் கால்வாய் பகுதிகளை சீரமைத்துத் தர எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
பாசன வசதிக்கு தண்ணீர் இல்லாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்த மக்கள் கால்வாயை சீரமைத்து தண்ணீரை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved